Skip to content
Home » திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தில்லை நகா் கிழக்கு, மேற்கு விஸ்தரிப்பில் உள்ள பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹை ரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட்ரோடு, மேலபுலிவாா்டு சாலை, ஜலால்பக்கிரி தெரு, ஜாபா்ஷா தெரு, பெரியகடை வீதி, சூப்பா் பஜாா், சிங்காரதோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதாா் தெரு, பெரியசெட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத்தெரு, சின்னகம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்திசந்தை, தஞ்சை சாலை, கல்மந்தை, கூனிபஜாா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!