திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி யாழினி. இவர் கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2023- 24 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 9 ம் தேதி நடைபெற்றது.இதில் பேச்சு போட்டியில் பங்கேற்ற தனியார் பள்ளி மாணவி யாழினி வெற்று பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நேற்றுதிருச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி யாழினிக்கு ரூ. 7000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கி பாராட்டினார். அப்போது கவிதை ஒன்று எழுதி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மாணவி யாழினி காண்பித்தார். அதை படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கவிதை நன்றாக உள்ளது என மாணவியை பாராட்டி வாழ்த்தினார். இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.இதில் தனியார் பள்ளி சார்பில் வெற்றி பெற்ற ஒரே மாணவி யாழினி என்பது குறிப்பிடத்தக்கது.