திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில்(அழகு நிலையம்) விபசாரம் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷனர் செல்வகுமார் மற்றும் போலீசார் அதிரடியாக அந்த ஸ்பாவுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த மூன்று இளம் பெண்களை மீட்டதுடன், ஸ்பா மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த ஸ்பாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் உடனடியாக அதனை காலி செய்ய வேண்டும் இல்லை என்றால் நாளை காவல்துறை அந்த நடவடிக்கையில் ஈடுபடும் என போலீசார் எச்சரித்தனர்.