Skip to content
Home » திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Senthil

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார் உட்பட 5 பேர் திடீரென மாநகர ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களை கமிஷனர் காமினி பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!