தமிழக செய்தித்தொடர்புத்துறை இயக்கநராக பணியாற்றி வந்த மோகன் ஐஏஎஸ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள செய்தித்துறை இயக்குநர் இடத்திற்கு திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.