Skip to content
Home » திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை இன்று (19.06.2023) துவங்கி வைத்து

உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்கள். அருகில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  மகேஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பா.செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர்  எஸ்.திவ்யதர்ஷினி வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர்  பத்மஜா, திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மண்டலத் தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர்  உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!