Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் கடுமையான உஷ்னத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது – குறிப்பாக

மண்ணச்சநல்லூர் நொச்சியும் முசிறி லால்குடி போன்ற இடங்களில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

நொச்சியம் அருகே உள்ள கூடப்பள்ளி,கிளிய நல்லூர்,குமரக்குடி போன்ற ஊர்களில் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தது – குமரக்குடி அருகே 100 ஆண்டுகளுக்கும் மேலான மருதமரம் வேரோடு சாய்ந்தது.

இதே போல் லால்குடி வாத்தலை முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் சில இடங்களில் முறிந்து விழுந்தது – சம்பா சாகுபடிக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் உளுந்து விதைக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான மழை மற்றும் காற்றின் காரணமாக உளுந்து பயிர்கள் சேதமாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!