Skip to content
Home » திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

  • by Senthil

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் திருவரம்பூர் பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது. மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட துணை ,அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் * அரியமங்கலம் கிளை * காமராஜ் நகர் கிளை * காட்டூர் கிளை * திருவரம்பூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதிகமான தெருமுனைகூட்டம், மார்க்க பிரச்சாரம் ,தர்பியா வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் புதிய கிளைகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது மற்றும் வரக்கூடிய 24.09.2023 அன்று காமராஜ நகர் கிளை சார்பாக 29 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அலுவலக திறப்பு விழா,

கொடியேற்றுதல் ,கல்வி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லா MLA அவர்களும் மற்றும் மாநில பொருளாளர் சபியுல்லா கான் அவர்களும் வருகை தர உள்ளார்கள் இதில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!