Skip to content
Home » திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சி புத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது .இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு எதிரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று கிடந்தது .இது குறித்து பணியில் இருந்த டாக்டர் நந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!