Skip to content
Home » திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

திருச்சி லால்குடி அருகே சிறுமயங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் இன்று காலை உணவு அருந்தியுள்ளனர். மொத்தம் 49 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை என 50 பேர் உணவு அருந்திய நிலையில் ஒரு மாணவன் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து 19 மாணவ, மாணவிகளுக்கும் வயிற்று வலி ஏற்பட்டதாக

பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் மாணவ மாணவிகளை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!