Skip to content
Home » திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன் பிப்ரவரி 11ம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றதால் அவரை வழி அனுப்பி வைக்க அவரது மனைவி லீலாவதியை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றுள்ளார்.

அதன் பின்னர் குமாரும், லீலாவதியும் கோபுரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக அங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று துறையூர் வீட்டுக்கு இருவரும் சென்ற போது வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த குமார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவைத் திறந்து அதிலிருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 12 ,1/2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக குமார் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியிலிருந்து கைரேகை நிபுனர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் குறித்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!