Skip to content
Home » ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பிலிப்பைன்ஸ் நாட்டை சிண்டிக்கோ நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் டிமீரியல்ஸ் ( 61). இவர் பெரம்பலூர் எறையூரில் உள்ள தனியார் சாக்கரை ஆலை நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று டிமெட்ரியோஸ் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் அறையில் உள்ள சோபாவில் டிமீரியல்ஸ் இறந்த நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த ஓட்டல் ஊழியர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த டிமீரியல்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து டிமீரியல்ஸ் இறந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!