Skip to content
Home » பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன்  தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல்

கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் 207 பேர் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். காவல்துறை சம்பந்தப்பட்ட 150 மனுக்களுக்கு உடனடியாக முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. இதனால் அந்த மனுக்கள் கொடுத்த மக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். மற்ற மனுக்கள்  சம்பந்தப்பட்ட துறையை அணுகும்படி  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!