Skip to content
Home » திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் உயிரிழப்பு…

திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் உயிரிழப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டபட்டு பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது. அங்கு சத்திரப்பட்டி விஜய நகரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 60) என்பவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு முட்டியது. இதில் நெஞ்சில் காயம் அடைந்தவர் திருச்சி அரசு மருதத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!