Skip to content
Home » திருச்சி அருகே காச நோய் குறித்த விழிப்புணர்வு….

திருச்சி அருகே காச நோய் குறித்த விழிப்புணர்வு….

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி கே அகரம் ஊராட்சியில் நடைபெற்ற காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புள்ளம்பாடி வட்டார காசநோய் தடுப்பு மேற்பார்வையாளர் பவானி துவக்கி வைத்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது.. காசநோய் குறித்து ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு உரையை வழங்கினர். மருந்து மற்றும் வழக்கமான பரிசோதனைகளை

கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் புகைபிடித்தல் மற்றும் மதுவை தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் மங்கையர்க்கரசி சோமசுந்தரம் வாழ் உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!