Skip to content
Home » திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

  • by Senthil

திருச்சி, கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஸ்குமார் (30). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொன்மலைப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி  ஆயிரம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 வயது முதல் 17வயதுடைய 4 சிறுவர்களை கைது  செய்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!