Skip to content
Home » திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

திருச்சி மாவட்டம் லால்குடியில் திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்,உளுந்து மறைமுக ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற எள் ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.16720 ம்,குறைந்தபட்சமாக ரூ.14000 ம் மற்றும் சராசரியாக ரூ.15400 க்கும் ஏலம் போனது.

லால்குடி வட்டார பகுதியைச் விவசாயிகள் 92 குவிண்டால்கள் எள் கொண்டுவந்து ஏலத்தில் கலந்துகொண்டனர்
. திருச்சி விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் மேற்பார்வையாளர்கள் .விவேக் மற்றும் திருமதி.சங்கீதா,வேளாண் வணிகம் உதவி வேளாண்மை அலுவலர் சிவசக்தி,அலுவலக உதவியாளர் பால்ராஜ் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர் மற்றும் இலால்குடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.16720 குறைந்தபட்சமாக ரூ.14000 ம் சராசரியாக ரூ.15400 க்கும் ஏலம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற எள் ஏலத்தில் 14 லச்சத்து 93 ஆயிரத்து 863 வர்த்தகம் நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் 9489477173, 8489880412 என்ற எண்ணை தொடர்ப்புகொள்ளலாம் என வேளாண் வணிகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!