Skip to content
Home » அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 15 நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக திருச்சி மாநகரில் தில்லைநகர் உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இந்நிலையில் சாஸ்திரி சாலையில் அமைச்சர் கே என் நேரு அலுவலகம் அருகே பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி சிக்கி கொண்டது லாரியின் பின்னால் உள்ள இரண்டு சக்கரங்களும் குழியில் சிக்கிக் கொண்டது. பாதாள சாக்கடை பணிகளும் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் அவ்வழியே ஒரு சில வாகனங்கள் மட்டும் செல்கின்றன.

லாரியின் இரண்டு சக்கரங்களும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. சுமார் 2 மணி நேரமாக சிக்கிக்கொண்ட லாரி பின்னர் மீட்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!