திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் எஸ். சக்திவேல், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.