Skip to content
Home » டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த  கோட்டப்பாளைய அடுத்த  வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி  ஆசிரியை  . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிவதுடன் , பணி நிமித்தம்  துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனது இரு பெண் குழந்தைகளுடன்  வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் கடந்த சில மாதங்களாக பிரிந்த வாழ்ந்து வருவதாக தெரிகிறது .

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் நடத்தியதின் மூலம் மாணவர்களிடையே நெருக்கமானதாக தெரிய வருகிறது . இவரிடம் படித்த துறையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் , தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்ததன் பேரில் , இரவு நேரங்களில் ஆசிரியையுடன்  வீடியோ காலில் அதிக நேரம் பேசி வருவதும் , படிப்பில் கவனமில்லாமல் இருந்ததையும் , மகனின் உடல் நிலையில் சோர்வு  ஏற்பட்டதையும் பார்த்த  பெற்றோர் மாணவனையும், ஆசிரியையைும் கண்டித்தனர்.

ஆனாலும் அவர்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பு குறையவில்லை. இதனால்  பெற்றோர் ஆசிரியையின் மீது  போலீசில் புகார் செய்ததனர். முசிறி அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார் . விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மாணவன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!