Skip to content
Home » திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

  • by Senthil

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் ஓ. எப். டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் ரயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அவரது மைத்துனர் ராஜ ரீகன் நவல்பட்டு வந்திருந்தார். பிறகு இன்று காலை 7 மணி அளவில் மீண்டும் மைத்துனரை வழி அனுப்ப மணிகண்டன் தனது டூவீலரில் அவரை அழைத்துக்கொண்டு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அப்போது பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்றபோது மதுரையிலிருந்து திருச்சி வந்த அரசு பஸ் மணிகண்டன் மீது உரசியதில் மணிகண்டன் நிலைதடுமாறி வண்டியுடன் கீழே விழுந்துள்ளார்.

இதில் பஸ்சின் சக்கரம் மணிகண்டன் தலையின் மீது ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மைத்துனர் ராஜரிகன் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மைத்துனரை ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கண்ட்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து  புலனாய்வு போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!