Skip to content
Home » திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணான 94874-64651 என்ற எண்ணுக்கு கிடைய ரகசிய தகவலின் படி ஜீயபுரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை செய்ததில் தீனா (எ) தீனதயாளன்,39/23, காந்திநகர், பெருகமணி, ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து தீனா (எ) தீனதயாளனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். தீனா (எ) தீனதயாளன் என்பவருடன் தொடர்பிலிருந்த இருந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகிய ஆறு நபர்கள் வாத்தலை பகுதியில் சித்தாம்பூர் என்ற இடத்திலுள்ள சித்தாம்பூர் பகுதியில் உள்ள வெடி கடையின் உரிமையாள் முகமது தாசிதீன், 62 என்பவரிடம் வெடிபொருட்களை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டுகளாகவும், வெங்காய வெடிகளாகவும் மாற்றி திருச்சி மாவட்டம், திருச்சி மாநகரம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேற்படி சித்தாம்பூர் வெடி கடையில் முகமது தாசிதீன் என்பவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெடி பொருட்களை பெற்று வந்து வாத்தலை பகுதியில் வைத்து விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். வெடி விற்பனை செய்த சித்தாம்பூர் வெடி கடையை இன்று மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்து உரிமம், வெடி மருந்து கையிருப்பு, வெடி மருந்து கடையின் இடத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களை விசாரணை செய்து ஆய்வு செய்தார்.

மேற்கண்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள். மேலும், நாட்டு வெடிகுண்டு தொடர்பான தகவல்கள், ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94874-64651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!