Skip to content
Home » திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள் முழுவதுமாக ஆக்கிரமித்து சாலையை கடப்பதால் பள்ளி , கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள் ஆளாகிறார்கள், குறிப்பாக அப்பகுதியில் செங்கல் சூளை அதிகமாக இயங்கப்படுவதால் அவர்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும் எனவே

இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!