Skip to content
Home » திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில்
பெண்களுக்கு ஆடுகள் 70ம் மற்றும் 30 நபர்களுக்கு மாடுகள் வழங்கப்பட்டது. மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு 330 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். மற்றும் தையல் இயந்திரம் மரக்கன்றுகள்,விதைகள் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் விமலா துறையூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அபிராமி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பாரிவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரா (எ) வீரபத்திரன், சிவ சரவணா முத்துச்செல்வன் அசோகன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, கஸ்டமஸ் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, தர்மன் விஜய், மாவட்ட பிரதிநிதி குமார், அம்மன் பாபு உள்பட ஊராட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!