Skip to content
Home » திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன் தினேஷ்பாபு ,ஆனந்தராஜ் நாச்சிகுறிச்சி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களிடம் இருந்து விளையாட பயன்படுத்தப்பட்ட சீட்டு கட்டுகள் 400 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!