Skip to content
Home » திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் கீழூர் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் 23 வயதான ஹரி கிருஷ்ணன்.இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள் ஹரி கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதில் ஹரி கிருஷ்ணன் தனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2 ம் தேதி மதியம் தனது வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!