திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று இரவு ஒரு மர்ம நபர் புகுந்தான். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவனை பிடித்தனர். பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவன் திருச்சியில் பல இடங்களில் நள்ளிரவில் வீடு புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டான். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்ட திருட்டு பொருட்கள் பல மீட்கப்பட்டன.
அத்துடன் அவன் வைத்திருந்த செல்போனை போலீசார் கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அப்போது பல பெண்களின் படங்கள் அதில் இடம் பெற்றிருந்தது.
திருடுவதற்காக நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும்போது அங்கு தூங்கிகொண்டிருக்கும் பெண்களை செல்போனில் போட்டோ பிடித்தும், வீடியோவில் பதிவு செய்தும் இருக்கிறான். அதில் பல படங்கள் பெண்கள் உடை விலகிய நிலையில் இருந்தது. சில பெண்கள் கணவனுடன் சேர்ந்து இருந்த காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்ததாம்.
இதைப்பார்த்த போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இதை ஏன் படம் பிடித்தாய் என கேட்டபோது எங்கே சென்றாலும் முதலில் பெண்களை கவர்ச்சியாக படம் பிடிப்பது தான் தனது வேலை என்று அவன் கூறினானாம். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.