Skip to content
Home » வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Senthil

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை செய்தும் இதுவரை பலன் இல்லை. எனவே குடியிருக்க முடியாத மக்களுக்கு குடியரசு தினம் எதற்கு எனக்கூறி குடியரசு தினத்தை புறக்கணித்து தமிழ் புலிகள் மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் மக்கள் பாதுகாப்பு பொதுச்செயலாளர் ராஜ்குமார், திருச்சி மாவட்ட தலைவர் சிட்டிசன் மற்றும் காருண்யா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!