திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இனிப்பு கடை அருகில் சுமார் 35 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதபமாக இறந்தார்.இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை ரவுண்டானா அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி நிலை கிடந்தார்.அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேவதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் அனுஷ் பாத்திமா கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.