Skip to content
Home » திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனா்.

ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி மாநாட்டிற்கு கரூரிலிருந்து ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் 5

பேருந்துகள், 10 மினி வேன்கள், ஐந்துக்கும் மேற்பட்ட கார் ஆகியவற்றில் எதிர்ப்பை மீறி வாகனங்களில் அதிமுக கட்சி கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டனர்.

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்துடன் புறப்பட்டனர். சில தொண்டர்கள் தலைக்கேறும் அளவுக்கு மது போதையில் பேருந்து நிலைய சிக்னல் அருகில் ஆரவாரம் செய்து, ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டு சென்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மது போதையில் ஆடிய ஓபிஎஸ் நிர்வாகிகளை பார்த்தவாறு முகம் சுளித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!