Skip to content
Home » திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் லோகநாதன் அவர்களின் வயலில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா மற்றும் பயிற்சி நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு உரை ஆற்றினார்.

குமுளூர் வேளாண்மை கல்லூரி மண்ணியல் துறை பேராசிரியர் சிவரஞ்சனி மண்ணின் தன்மை, அங்கக இடுபொருட்களின் அவசியம், மண்புழு உரம் தயாரிப்பு அதன் பயன்கள் குறித்தும் உரை ஆற்றினார்.

மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ஜெயராணி


இயற்கை வேளாண்மையில் பசுந்தாள் உரம், பசுந்தழை உரங்கள் உயிர் உரங்கள் பயன்கள் குறித்தும் பயன்படுத்தும் அளவு குறித்தும் அங்கக சான்றளிப்பு குறித்தும் உரை ஆற்றினார்.

பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றுவது குறித்தும் பிச்சாண்டார்கோயில் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் கென்னடி உரை ஆற்றினார்.

இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, மீன் கரைசல் ஆகியவை செய்யும் முறைகள் குறித்தும் பயன்படுத்தும் அளவு குறித்தும் லோகநாதன் உரை ஆற்றினார்.

வேளாண்மை உதவி அலுவலர் கதிரேசன் நன்றி உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாபு, ஆனந்த், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அனிதா உதவி தொழில்நுட்ப மேலாளர் சுவேதா ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!