Skip to content
Home » திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதியை  சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற பெயரில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளனர். இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதை மறுசுழற்சி செய்து பவுடர் ஆக்கி பேக்கிங் செய்து பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வருகின்றனர்.

நேற்று இரவு 7 மணிக்கு மேல் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவல் அறிந்த சமயபுரம், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மாவட்ட உதவி அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் தலைமையில் வீரர்கள்  விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் பிளாஸ்டிக் பொருட்கள் இயந்திரங்கள் என சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அக்கம் பக்கம் குடியிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்த தீ விபத்து மின்சாரம் இல்லாத பகுதியில் ஏற்பட்டதால் மர்ம நபர்கள் யாராவது தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து  போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!