Skip to content
Home » கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கரூர்   தான்தோன்றிமலை  பகுதியில் வசித்து வரும் லதா(32 ), சரவணன் (33 ) தம்பதியினர் கடந்த 2012ல்  பெற்றோர் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டனர்.    அதாவது சரணவன் 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மௌசிக் (  9) சாக்ஷி ( 2 1/2) என்ற இரு குழந்தைகள்  உள்ளனர்.  இந்நிலையில்  கடந்த 2014 ம் ஆண்டு  சரவணனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. காவலர் பயிற்சி முடிந்ததும், அவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த போது அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த  45 வயது சுபாஷினி என்ற  பெண்ணுடன்    சரவணனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.    திருடி தின்னும் பழமே ருசி என்பது போல  சரவணனுக்கு  சுபாசினியின்  மீதே  அதிக  காதல் ஏற்பட்டது. இதனால் கட்டிய மனைவியையும், குழந்தைகளையும்  கவனிக்கவில்லை.

இந்த விவகாரம் மனைவி லதாவுக்கு தெரியவந்தது.  கணவனின் கள்ளக்காதலை தட்டிக்கேட்டார். இதனால் குடும்பத்தில் சண்டை தொடங்கியது.  கணவனின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து லதா போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.  தன்னைப்பற்றி எப்படி அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என சரவணன் மனைவியை மிரட்டத் தொடங்கினார். ஒரு முறை மனைவியை கன்னத்தில் ஓங்கி அடித்து உள்ளார். இதனால் லதா காது கேட்கும் திறனை இழந்து விட்டது.

இந்த நிலையில்  கரூர் தான்தோன்றிமலை போலீசில் லதா புகார் செய்து உள்ளார். போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கதறிய லதா நேற்று கரூர் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் கணவனை பற்றியும், கள்ளக்காதலி சுபாஷினி பற்றியும் புகார் மனு கொடுத்து உள்ளார்.

கணவனால் கைவிடப்பட்ட நிலையில், 2 குழந்தைகளுடன்  வாடும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால்  குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்.  நடவடிக்கை எடுக்காத போலீசார்  தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தான் தற்கொலை செய்வேன் என கூறி உள்ளார்.  இந்த குடும்பத்தை போலீசார் அல்லது கலெக்டர்   காப்பாற்றுவார்களா என்பது அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!