Skip to content
Home » சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரேம்குமார்( 23). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் மகள் ஆர்த்தியா (23). என்ஜினியரிங் படித்துள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் நேற்று வயலூரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், ஆர்த்தியாவின் பெற்றோர், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அஞ்சிய காதல் திருமண ஜோடி நேற்று சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோரை போலீஸ் ஸ்டேசன் வரவைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது ஆர்த்தியா, பிரேம்குமாருடன் செல்வதாக கூறினார். இதனை தொடர்ந்து ஆர்த்தியாவை பிரேம்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!