Skip to content
Home » மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Senthil

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின் வீட்டில் போர் தண்ணீர் வரவில்லையாம்.

இதைத் தொடர்ந்து மூர்த்தி மாடியில் உள்ள மின் மோட்டாரை சரி செய்ய படிக்கட்டில் ஏறி சென்றார். அப்பொழுது

மூர்த்தி திடீரென்று நிலைதடுமாறி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மூர்த்தியை உடனடியாக மீட்டு  திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள்  மூர்த்தி இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக போலீஸ்காரர் மூர்த்தி உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!