Skip to content
Home » திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அரு கில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம்  நடப்பட்டிருந்தது. இந்த இடத் தின் அருகில் பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடமாகும். எனவே இதனை அகற்ற வேண்டும் என  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாாித்த நீதிபதி , 100 அடி உயர கொடி கம்பத்தை 15 நாட்களில் அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப் பித்ததுடன்,  அறிக்கை தாக் கல் செய்யவும்  உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மாவட்டஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் நீதி மன் றம் உத்தரவிட்டும் திமுக கொடிக்கம்பம் அகற்றப்பட வில்லை எனவும், ஆளுங்கட் சியாக திமுக உள்ளதால் ஆட்சியர் கொடிக்கம்பத்தை அகற்றவில்லை என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதி பதிகள்,ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடி யாது.  உடனே அகற்ற உத்தரவிடப்பட்டது.

 

இந்நிலையில் அந்தக் கொடி கம்பத்தை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கொடிக்கம்பத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் ஓரிரு நாளில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு இடமாற்றப்பட்டு வைக்கப்படும் என  திமுகவினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!