Skip to content
Home » திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நிர்மல் ராஜ் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரம் பின்புறம் ரயில்வே ட்ராக் அருகே ரயிலில் அடிபட்டு நிர்மல் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் இது பற்றி பொன்மலை ரயில்வே போலீசாருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் அளித்தனர்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் நிர்மல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொன்மலை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!