Skip to content
Home » திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.

அதன் பின்னர் காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்ட அவர்,  காவல்துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.பல்வேறு துறைகளின் கீழ் 31பயனாளிகளுக்கு 32 லட்சத்து 68 ஆயிரத்து 55ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்,

மேலும் 311 காவலர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின்  கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.இதனை ஏராளமான பொதுமக்கள் மகிழ்வுடன் கண்டு களித்தனர்.

.

 

 

திருவாரூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியகொடியேற்றிவைத்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.  பின்னர் தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.விழாவில் எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!