Skip to content
Home » திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, புத்தூர் மாரியம்மன் நகர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது (29) இவர் தனியார் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கட்டுமான பணியானது நாச்சி குறிச்சி நாகலட்சுமி நகரில் நடைபெற்று வருகிறது.

அங்கு கட்டுமான இரும்பு கம்பிகள் 20 கிலோ திடிரென மாயமாகிருந்தது நந்தகுமாருக்கு தெரியவந்தது. இது குறித்து நந்தகுமார் உடனடியாக சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த தனியார் நிறுவன கட்டுமான கட்டிடத்தில் கிலோ கணக்கில் இரும்பு கம்பிகளை திருடிய வயலூர் மெயின் ரோடு சாந்த சீலா நகரை சேர்ந்த காளிமுத்து வயது (23) மற்றும் வயலூர் ரோடு சண்முகா நகர் 4வதுகுறுக்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் வயது (20) ஆகிய இரண்டு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!