Skip to content
Home » கருணாநிதி சிலை…. திருச்சியில் திறப்பு

கருணாநிதி சிலை…. திருச்சியில் திறப்பு

  • by Senthil

திமுக தலைவரும், முதல்வருமான  மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்த வகையில்  இதுவரை  75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியாக  கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில்  கருணாநிதி சிலை  அமைக்கப்பட்டது.

அந்த சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது.  தெற்கு மாவட்ட செயலாளரும்,

பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது
மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன்,  துணை மேயர் திவ்யா,  மத்திய மாவட்ட திமுக செயலாளர்  வைரமணி, கவிஞர் சல்மா,கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன்,  முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திமுக  தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!