Skip to content
Home » திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பள்ளியில் நேரு உருவத்தில் மாணவர்கள் உலக சாதனை…

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பள்ளியில் நேரு உருவத்தில் மாணவர்கள் உலக சாதனை…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது துப்பாக்கி தொழிற்சாலை இங்கு உள்ள படைக்கலன் (சிபிஎஸ்இ) உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உலக சாதனை செய்து அசத்தினர் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் படைக்கலன் தொழிற்சாலை (சிபிஎஸ்இ) உயர்நிலைப் பள்ளியில் வரும் 14ஆம் தேதிமறைந்த பிரதமர் நேருவுக்கு 134 வது பிறந்த தினம் இதனை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி சார்பில் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நேரு உருவத்தில் மாணவர்கள் உலக சாதனை நிகழ்ச்சி செய்தனர்.  சாதனை நிகழ்ச்சிக்கு பள்ளியின்

முதல்வர் பெ.சித்ரா தலைமை வகித்தார் சாதனையை பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த செ. வெங்கடேசன் சி கலைவாணி ஆகியோர் கண்காணித்தனர் விழாவை ஏ பாலமுருகன் ஆர் அமுதா பிஜே ஜேக்கப் எ மோகன் அலெக்ஸாண்டர் ஆகியோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தலைமை வகித்து ஒருங்கிணைத்தனர் இதில் மாணவ-மாணவியர்கள் 355 பேர் கலந்து கொண்டு நேரு உருவத்துடன் (ஐ லவ் இந்தியா) இந்தியாவை நேசிப்போம் என்கின்ற அடையாளத்துடன் மைதானத்தில் காட்சி தந்தது அனைவரையும் ரசிக்க வைத்ததுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!