Skip to content
Home » மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48).
குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன் தங்கவேல் வீட்டுக்குச் சென்றார்.
அப்போது வீட்டின் படிக்கட்டில் பரமசிவம் தடுமாறி விழுந்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரமசிவம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!