Skip to content
Home » திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

  • by Senthil

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர்.

தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண  படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மழை வெள்ள நிவாரண பணிக்காக 260 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்,
சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தூய்மை பணிக்காக கனரக வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தூய்மை பணிக்கான உபகரணங்களுடன் தனி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.  அவர்களை திருச்சி மாநகரர்சி செயற்பொறியாளர்கள்  அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!