Skip to content
Home » திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வடகரை மாணிக்கப்புரத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் பிரேம் பெலிக்ஸ் ராஜ் வயது (26) இவருக்கு ரென்சியா வயது(28) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்ஜினியரிங் படித்து விட்டு டிராக்டர் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். தான் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த பெலிக்ஸ் ராஜீவுக்கும் அவரும் மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது அதில் மனம் உடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவானைக்கோவில் செக் போஸ்ட் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

தொடர்ந்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததில் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெலிக்ஸ் ராஜ் உடலை கைப்பற்றி திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!