Skip to content
Home » திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பதும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் திருச்சி போலீஸ் எஸ் பி வருண் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் நாய் லீலீ துப்பறிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யபட்ட பெண்ணின் கணவர் விவேக் என்பவரை அழைத்து விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.  விவேக் ராயவேலூரில் வேலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!