10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் மேயர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். 2023-ல் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலரான இவர், கடந்த ஓராண்டாக துணை மேயராக பணியாற்றி தற்போது மேயர் பதவியை எட்டியுள்ளார்.
