Skip to content
Home » தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

கோவை மாவட்டம் பல்லடத்தில் இன்று தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபு என்பவர் மீது சிலர்  கொடூரமாக தாக்குதல் நடத்தி  அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த நேசப்பிரபு  கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நிருபர் போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நிருபர் மீது நடந்த தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது  கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் முதல்வர் கூறி உள்ளார்.  தாக்குதலுக்கு ஆளான  நிருபருக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அத்துடன் உடனடி நடவடிக்கை எடுக்க தவறிய  போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!