Skip to content
Home » நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை கடந்த 4-ம் தேதி எலான் மஸ்க் திடீரென மாற்றினார். “நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டது. இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது டுவிட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

உலகின் நம்பர் 1 பணக்காரரான  எலான் மஸ்க் அடிக்கடி இதுபோன்ற குழப்பங்கள், கோமாளித்தனங்கள் செய்வதில்  எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!