பாபநாசம் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது வழுத்தூர் என்னும் இடத்தில் நாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டது இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோல் விபத்துக்கள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
