சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி அடையாள அட்டையை காண்பித்து சோதனை நடத்திய கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.
